Tuesday, March 15, 2011

முதல் சிறுகதை அனுபவம்


     நண்பர் பார்வையாளன் இப்படி ஒரு பதிவைக் கேட்டதால், முதல் சிறுகதை - சவால் சிறுகதைப் போட்டிக்காக 'சவாலே சமாளி'  - எழுதிய அனுபவம் இங்கே.
(மைன்ட் வாய்ஸ்(#) : ரொம்ப தான் சிறுகதை எழுதிக் கிழிச்ச மாதிரி!! ம்க்கும்!)

     எனது முந்தைய இடுகையில் வலைப்பூ தொடங்கி சிறுகதை அனுப்பியதை எல்லாம் சொல்லியிருக்கிறேன் (மைன்ட் வாய்ஸ் - சுய புராணம் தாங்கலை!....). என் நலன் விரும்பி என்னை போட்டிக்குச் சிறுகதை எழுதச் சொல்லிக் கட்டாயப் படுத்தியதாகச் சொன்னேன் - அவர் மேலும் சொன்ன ஒரு வாக்கியம் தான் என்னை எப்பாடு பட்டாவது கதையை போட்டிக்கு அனுப்ப வேண்டும் எனத் தூண்டியது!  அவர் என்னை அப்படி என்ன சொன்னார் தெரியுமா?!!  'நீ எழுதுவாய் என்றுதான் நான் போட்டிக்குச் சிறுகதை அனுப்பவில்லை!! '   (மைன்ட் வாய்ஸ் - இது அவர் தன் மேலே வைத்திருந்த self confidence - இதைப் போய் பாராட்டுன்னு....)

     நான் போட்டிக்கான விதிமுறைகளைப் படித்தேன்.  கொடுக்கப்பட்ட மூன்று வாக்கியங்களை கதையின் போக்கில் வரிசை மாறாமல் கொண்டு வர வேண்டும்.  காமினி என்ற காரக்டரைக் கெட்டவராகக் காண்பிக்கக் கூடாது, வாக்கியங்கள் பயன்படுத்துவது ஃபிளாஷ்பாக்கோ, கனவு சீனாகவோ இருக்கக் கூடாது.  October 15ம் தேதி- இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு போட்டிக்கான டெட்லைன். (மைன்ட் வாய்ஸ் - இதெல்லாம் சக பதிவர்களுக்கே தெரியும்....)  கதை எழுத உட்கார்ந்தது October 15ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு மேலே-    (மைன்ட் வாய்ஸ் - ராகு காலம் ஆரம்பிச்சிடுச்சி....)
     எனக்கோ வலைப்பூ தொடங்கியிருந்தாலும் அதில் எழுதத் தெரியாது;  தமிழில் தனியாகத் தட்டச்சு செய்தும் பழக்கமில்லை.  சரி, மின்னஞ்சலிலேயே முயற்சிப்போம் என்று தொடங்கினேன்.  கதைக்குக் கரு?  சரி, ஃபிளாஷ்பாக்கோ, கனவு சீனாகவோ இருக்கக் கூடாது என்றால் ஏன் இது ஒரு தொலைக்காட்சி ஸீரியலில் வரக் கூடாது என்று மனதிற்குள் ஒரு வில்லச் சிரிப்போடு சாவிப்பலகையில்,  ஸாரி, கீபோர்டில் தட்ட ஆரம்பித்தேன்!. முன்பே சொன்ன மாதிரி 11.16 க்கு அனுப்பி விட்டேன்.  (மைன்ட் வாய்ஸ் - edit எல்லாம் பண்ணத் தெரியலைன்னு நேரடியாகச் சொல்றது தானே...)

      அனுப்பிய கதை போட்டியில் ஏற்கப்பட்டது,  இந்த வாசகங்களோடு - "இவருக்கு வலைப்பூ கிடையாது. இவர் இந்தப் போட்டிக்காகத்தான் முதன்முதலில் எழுதுகிறார்..."  பின்னர் முன்பே சொன்ன மாதிரி கதையை வலைப்பூவில் முதல் (authorised)இடுகையாகத் தட்டுத் தடுமாறி வெளியிட்டேன்.
     கதையைப் படித்திருப்பீர்கள்
(மைன்ட் வாய்ஸ்- என்ன கொடுமை பார்வையாளன் சார் இது.... ).  கதைக்கு நீதிபதியின் விமர்சனம் கீழே:  
78. சவாலே சமாளி – மிடில்கிளாஸ் மாதவி
மனைவிக்காக வீட்டில் சீரியல் பார்க்கும் கணவன். சீரியலில் வருவதாக, போட்டிக்கான வரிகள். மொத்த கதையுமே ஒரு பக்கக் கதையின் அளவில் பாதிதான் என்பதே இதை சீரியஸ் முயற்சியாக நினைக்க வைக்கவில்லை.

 தீர்ப்புக்கு   எனது பின்னுரை:

முதலில் ஒரு ஷொட்டு - நான் சீரியசாக எழுதவில்லை என்று சொன்னதற்கு - நான் காமெடியாக எழுதத் தான் முயற்சி செய்தேன்!:)). ...ஆனாலும் ஒரு வருத்தம்- சீரியலில் அந்த 3 வாக்கியங்கள் வந்தாலும், அந்தக் கதைக்கும் ஒரு தொடர்ச்சியும் முடிவும் இருந்ததாக நினைக்கிறேன். என்னை தொடர்ந்து எழுதத் தூண்டியமைக்கு நன்றி.   

டிஸ்கி - நன்றி பார்வையாளன்.  (மைன்ட் வாய்ஸ் - ம்... மத்தவங்க என்ன சொல்லப் போறாங்களோ,.. பாவம்..)

(#) மைன்ட் வாய்ஸ் - ஆமாம்; நீங்க நினைக்கிற பதிவர்கிட்டேருந்து தான் காப்பி - காப்பி அடிப்பது ஒருவரைப் புகழறதாகத் தானே அர்த்தம்!! - Imitation is the best form of flattery! - Thanks சொன்னா - Any Time Madhaviன்னு அவங்க பெரிய மனசோட சொல்லிடுவாங்க!

36 comments:

r.v.saravanan said...

i am first

r.v.saravanan said...

எழுத வேண்டும் என்ற உந்துதலையும் எழுதலாம் என்ற நம்பிக்கையையும் கொடுத்தது இந்த முதல் முயற்சி தான்!

வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

நிச்சயம் உங்களால் முடியும் என்று நம்பிக்கை பிறந்ததே அதுவே வெற்றியின் முதல் படி..

vanathy said...

உங்களில் மற்றவருக்கு நம்பிக்கை வரும் போது உங்களுக்கு வராதா!!
நல்ல போஸ்ட்.

தமிழ் உதயம் said...

கிடைத்த அனுபவத்தை கதையாக்குவார்கள். நீங்களோ கதை எழுதிய அனுபவத்தை கட்டுரையாக்கிவிட்டீர்கள். நன்றாக இருந்தது.

pichaikaaran said...

மிகவும் ரசித்து படித்தேன் . முதல் கதையிலேயே பரபரப்பு ஏற்படுத்தி விட்டீர்கள் . அன்று பொறாமையாக இருந்தது. இன்று மகிழ்ச்சியாக உள்ளது

எல் கே said...

நல்ல அனுபவம் , நாங்க ஏற்க்கனவே ஒரு மைன்ட் வாய்ஸ்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறோம் இதில் மற்றும் ஒன்றா

R. Gopi said...

\\பார்வையாளன் said...
மிகவும் ரசித்து படித்தேன் . முதல் கதையிலேயே பரபரப்பு ஏற்படுத்தி விட்டீர்கள் . அன்று பொறாமையாக இருந்தது.\\

மாதவியின் மைன்ட் வாய்ஸ் : என்னிய வெச்சுக் காமெடி கீமெடி பண்ணலயே:-)

R. Gopi said...

கோபி: அப்பாவி தங்கமணி நிறைய பேரை influence பண்ணி இருக்காங்க.

கோபியின் மைன்ட் வாய்ஸ்: இது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு தெரியலியே

மாதவி, நான் நெனச்சேன் இந்தப் பதிவுல நீங்க கெக்கே பிக்கேன்னு ஏதாவது எழுதுவீங்கன்னு:-). I am wrong All The Time:-)

middleclassmadhavi said...

@ r.v.saravanan - வாழ்த்துக்களுக்கு நன்றி

middleclassmadhavi said...

@ ரிஷபன் - /நிச்சயம் உங்களால் முடியும் என்று நம்பிக்கை பிறந்ததே அதுவே வெற்றியின் முதல் படி.. /
தாங்கஸ்!

middleclassmadhavi said...

@ vanathy - /உங்களில் மற்றவருக்கு நம்பிக்கை வரும் போது உங்களுக்கு வராதா!!
நல்ல போஸ்ட். / அதானே?! தாங்க்ஸ்!

middleclassmadhavi said...

@ தமிழ் உதயம் -/கிடைத்த அனுபவத்தை கதையாக்குவார்கள். நீங்களோ கதை எழுதிய அனுபவத்தை கட்டுரையாக்கிவிட்டீர்கள். நன்றாக இருந்தது. / -பார்வையாளன் அவர்களுக்கு நன்றி!, உங்களுக்கும்!

middleclassmadhavi said...

@ பார்வையாளன் - கோபி சொன்னது தான் - என்னைய வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே?!!

middleclassmadhavi said...

@ எல். கே - /நாங்க ஏற்க்கனவே ஒரு மைன்ட் வாய்ஸ்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறோம் இதில் மற்றும் ஒன்றா/ இமிடேஷன் எல்லாம் நிலைக்காது!!

middleclassmadhavi said...

@ கோபி ராமமூர்த்தி - அப்பாவி பாவம் அப்பாவி!!
(எங்கள் கோஷ்டியை விட்டுக் கொடுக்கக் கூடாது!!)

/I am wrong All The Time:-) / எதையும் ஆராய்ந்து தெளிவாக விளக்கும் you are always right!! :)) மைன்ட் வாய்ஸ் எல்லாம் படித்து மென்டல் ஆகிட்டேனோன்னு ஏற்கெனவே என் மகன் பயப்படறான்!! :-))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதல் சிறுகதை அனுபவமே இப்படி நல்லா இருந்துசுன்னா, அப்போ சிறுகதையைப்பற்றி கேட்கவே வேண்டாம்.

ரிஷபன் சார் சொல்வதையே நானும் சொல்ல நினைக்கிறேன்.//நிச்சயம் உங்களால் முடியும் என்று நம்பிக்கை பிறந்ததே அதுவே வெற்றியின் முதல் படி//

பாராட்டுக்கள்.

raji said...

முதல் கதையிலேயே பெரிய ஆளாய்ட்டீங்க.
தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்க வாழ்த்துக்கள்.
(மாதவி மைண்ட் வாய்ஸ்: விஸ்வரூபம்?எடுக்கலாம்தான்,
ஆனா பாவம் நம்ம ஜனங்க தாங்கணுமே ராஜி?!!! :-))) )

செங்கோவி said...

சட்டென்று சீரியல் ஐடியா தோன்றியது பெரிய விஷயம் தான்..பாராட்டுக்கள் உங்களுக்கு, நன்றி பார்வையாளனுக்கு!

middleclassmadhavi said...

@ வை கோபாலகிருஷ்ணன் - ரொம்ப நன்றி!

middleclassmadhavi said...

@ raja - /முதல் கதையிலேயே பெரிய ஆளாய்ட்டீங்க/ என்னங்க நீங்களும் என்னை வைச்சு காமெடி பண்ணறீங்க! :-))
/(மாதவி மைண்ட் வாய்ஸ்: விஸ்வரூபம்?எடுக்கலாம்தான்,
ஆனா பாவம் நம்ம ஜனங்க தாங்கணுமே/
அதுக்கு முதலில் computer graphics எல்லாம் தெரிஞ்சுக்கணுமே!! or largest font?!:-))
பாராட்டுக்கு நன்றி!

middleclassmadhavi said...

@ செங்கோவி -/சட்டென்று சீரியல் ஐடியா தோன்றியது பெரிய விஷயம் தான்..பாராட்டுக்கள் உங்களுக்கு, நன்றி பார்வையாளனுக்கு! /
நன்றி! நன்றி!

settaikkaran said...

சித்திரம் கைப்பழக்கம்; சிறுகதை mouse பழக்கம்! கலக்குங்கள்! :-)

middleclassmadhavi said...

@ raji - sorry, உங்கள் பெயர் raja ன்னு டைப் பண்ணிட்டேன் - மன்னிச்சிக்கோங்க!

middleclassmadhavi said...

@ சேட்டைக்காரன் - /சித்திரம் கைப்பழக்கம்; சிறுகதை mouse பழக்கம்! கலக்குங்கள்! :-) /
ரொம்ப நன்றி!

Asiya Omar said...

இது முதல் கதை என்றால் நிச்சயமாய் பாராட்டியே தீரணும்.அருமை.
இந்தக் கருத்திற்கு என்ன மைண்ட்வாய்ஸ் என்று தெரிந்து கொள்ள ஆசை.

middleclassmadhavi said...

@ asiya omar - /இது முதல் கதை என்றால் நிச்சயமாய் பாராட்டியே தீரணும்.அருமை./ நிஜம்மா இது முதல் கதை தாங்க - அப்ப பாராட்டுக்கு நன்றி!

(மைன்ட் வாய்ஸ் - பின்ன நான் தான் சொல்லிக் கொடுத்தேன்னால் நம்பப் போறீங்களா என்ன?!)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எழுத வேண்டும் என்ற உந்துதலையும் எழுதலாம் என்ற நம்பிக்கையையும் கொடுத்தது இந்த முதல் முயற்சி தான்//

Thats great :)))

//ஆமாம்; நீங்க நினைக்கிற பதிவர்கிட்டேருந்து தான் காப்பி - காப்பி அடிப்பது ஒருவரைப் புகழறதாகத் தானே அர்த்தம்!! - Imitation is the best form of flattery! - Thanks சொன்னா - Any Time Madhaviன்னு அவங்க பெரிய மனசோட சொல்லிடுவாங்க//
ஆஹா... honestly flattered ....:).... தேங்க்ஸ்ங்க...:)))...

"ஆனா என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைச்சு இருக்கேன் மாதவி...அந்த கண்ணுல நான் ஆ...ஆ..ஆந்த கண்ணீர தான்...ச்சே..ஆனந்த கண்ணீர தான் பாக்கணும்" அப்படின்னு சொல்லவே மாட்டேன்... போட்டு தாக்குங்க அந்த மைண்ட்வாய்ஸ்ஐ...ஹா ஹா ஹா ஹா... :)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எல் கே said... நல்ல அனுபவம் , நாங்க ஏற்க்கனவே ஒரு மைன்ட் வாய்ஸ்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறோம் இதில் மற்றும் ஒன்றா //
ஹா ஹா ஹா... நல்லா வேணும் நல்லா வேணும்...:))

//கோபியின் மைன்ட் வாய்ஸ்: இது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு தெரியலியே//
உலகமே உனக்கு எதிரா இருக்கே தங்கமணி..ஹ்ம்ம் ...:)))

//அப்பாவி பாவம் அப்பாவி//
மாதவி வாழ்க...:))

//மைன்ட் வாய்ஸ் எல்லாம் படித்து மென்டல் ஆகிட்டேனோன்னு ஏற்கெனவே என் மகன் பயப்படறான்!!//
இதான் வாராய் நீ வாராய்னு கூட்டிட்டு போய் தள்றதா....grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.....:)))

Prabu Krishna said...

ஓ இது தான் கதை கதையாம் காரணமாம்னு சொல்றதா.

கதை எழுதும் போதே இந்த மைண்ட் வாய்ஸ் எல்லாம் உங்களுக்கு வந்து இருக்குமே.

middleclassmadhavi said...

@ அப்பாவி தங்கமணி - ரொம்ப நன்றி மைன்ட் வாய்ஸ போட்டுத் தாக்க பெர்மிஷன் கொடுத்ததற்கு!

//இதான் வாராய் நீ வாராய்னு கூட்டிட்டு போய் தள்றதா....grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.....//
சின்னப் பையன், அவனுக்கென்ன தெரியும், மைன்ட் வாய்ஸோட அருமை? அவன் சொன்னதையெல்லாம் மைன்ட் பண்ணாதீங்க!! அமைதி கொள்ளுங்கள்!! :))

middleclassmadhavi said...

@ பலே பிரபு - //கதை எழுதும் போதே இந்த மைண்ட் வாய்ஸ் எல்லாம் உங்களுக்கு வந்து இருக்குமே. //
வந்துதே - //மனதிற்குள் ஒரு வில்லச் சிரிப்போடு//!! :))

இராஜராஜேஸ்வரி said...

நம்பிக்கைதானே வாழ்க்கை.

கோமதி அரசு said...

முதல் சிறுகதை அனுபவம் நல்லா இருக்கிறது மாதவி.

நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said...

@ இராஜராஜேஸ்வரி - /நம்பிக்கைதானே வாழ்க்கை/ - யெஸ், யெஸ்!

middleclassmadhavi said...

@ கோமதி அரசு - வாழ்த்துக்களுக்கு நன்றி!