ஆங்கில எழுத்துக்கள் பற்றிய சில கேள்விகள்: (முன்பே பாபுலர் ஆகியிருந்தாலும் 'வரலாற்றில் பதி'வதற்காக)
1.வரிசையில் நிற்கும் எழுத்து Q; சூடான பானம் பருகும் எழுத்து T. எப்பவும் கூலாக இருக்கும் எழுத்து எது?
2.எப்ப அடிபட்டாலும் சிகிச்சைக்குக் கவலைப்பட வேண்டாத எழுத்துகள் எவை?
இனி ஆங்கில எழுத்துகள்/வார்த்தைகள் கொண்டு தமிழ்/ஆங்கில பதில்கள் கொண்ட கேள்விகள்:
அ) உலகிலேயே உங்களை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் நகரம்(city) எது?
ஆ) அலைகள் இருந்தும் தண்ணீர் இல்லாத கடல்(சி) எது?
மூன்றாவது வகைக் கேள்விகள்
i) 50 கோழிகள் இருந்த கோழிப் பண்ணையில் இரண்டைத் தவிர மற்றவை இறந்துவிட்டன. எத்தனை கோழிகள் உயிரோடு இருந்தன?
ii) உங்கள் ஒரு கையில் 4 ஆப்பிள்களும் 3 ஆரஞ்சுகளும் மற்றொரு கையில் 3 ஆப்பிள்களும் 4 ஆரஞ்சுகளும் இருந்தால், உங்களிடம் எவை இருக்கும்?
பதில்கள் வரவேற்கப்படுகின்றன.