ஒரு மாறுதலுக்கு கொஞ்சம் லாஜிகலான கேள்விகளைப் பார்ப்போமா? (டென்ஷன் ரிலீவர்!!) விடைகள் நேர் வழியில் யோசித்துச் சொல்லும்படியும் வரலாம், ரம்பமாக (மொக்கையாக)வும் இருக்கலாம். இந்த பாணியில் என் பழைய பதிவுகளை, இங்கேயும் இங்கேயும் தேவையானால் பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தாலும் உதாரணத்துக்கு இதோ இரு கேள்வி பதில்கள்:
கனமான மரப்பெட்டியில் மரத்தை வெட்டி எறியாமல் எப்படி வெயிட்டைக் குறைப்பது?
விடை: மரத்தில் ஓட்டைகள் போட்டுக் குறைக்கலாம்.
ஏன் சிங்கம் பச்சை மாமிச(raw meat) த்தைச் சாப்பிடுகிறது?
விடை: அதற்கு சமைக்கத் தெரியாததால்!
இனி கேள்விகள்:
இவற்றிற்கான விடைகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இதற்காக பின்னூட்டங்கள் உடனே வெளியாகாமல் தடுக்கப்படுகின்றன!. விடைகளைப் பின்னர் வெளியிடுகிறேன்.
கனமான மரப்பெட்டியில் மரத்தை வெட்டி எறியாமல் எப்படி வெயிட்டைக் குறைப்பது?
விடை: மரத்தில் ஓட்டைகள் போட்டுக் குறைக்கலாம்.
ஏன் சிங்கம் பச்சை மாமிச(raw meat) த்தைச் சாப்பிடுகிறது?
விடை: அதற்கு சமைக்கத் தெரியாததால்!
இனி கேள்விகள்:
- வெள்ளிக்கிழமை வெளியூர் புறப்பட்ட கௌபாய் ஜெய்சங்கர் - சனி, ஞாயிறு ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வெள்ளியில் கிளம்பித் திங்களன்றே திரும்பிச் சென்றார். எப்படி?
- எண் 1050-ல் இரண்டில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தினோடு ஐந்தைக் கூட்டினால் வரும் எண் என்ன?
- நாள் முழுவதும் பறக்கும் அது எங்குமே செல்வதில்லை; அது என்ன?
- இது அடுத்தவரிடமிருந்து சுலபமாகப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் இதை விட்டு எறிய முடியாது; அது என்ன?
- காலண்டரைத் திருடிய திருடனுக்கு எத்தனை மாதங்கள் கிடைத்தன?
- கடலில் போய்க் கொண்டிருக்கும் ஒரு சிறிய கப்பலின் பக்கத்தில் ஒரு கயிற்றாலான ஏணி தொங்குகிறது - 10 படிகளும் அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு அடி வித்தியாசத்திலுமான ஏணி. - ஏணியின் ஒரு படி மட்டும் நீருக்கு அடியில் இருக்கிறது. அன்று இரவு பலத்த மழை பெய்கிறது. இரண்டு மணி நேரத்தில் ஒரு அடி தண்ணீர் எழும்புகிறது என்றால், பாதி ஏணி வரை தண்ணீர் எப்போது வரும்?
இவற்றிற்கான விடைகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இதற்காக பின்னூட்டங்கள் உடனே வெளியாகாமல் தடுக்கப்படுகின்றன!. விடைகளைப் பின்னர் வெளியிடுகிறேன்.
