சவால் - சிறுகதைப் போட்டி 2011
இம்முறையும் சிறுகதைப் போட்டியை பரிசல்காரன் சிலரோடு சேர்ந்து அறிவித்துள்ளார். விவரங்களை இந்த இரண்டு சுட்டிகளிலும் பார்க்கவும். போட்டிக்கான விதிமுறைகளைப் பின்பற்றி, கடைசி நாளான 31-10-2011 க்குள் அனுப்புங்கள்! முன்பே இந்த அறிவிப்பைப் பார்க்காதவர்களுக்குத் தான் இந்த தகவல்!
இந்த தகவலை நான் இங்கு சொல்லக் காரணம் இருக்கிறது. 18-10-2010 அன்று தான் சவால் சிறுகதைப் போட்டி (2010 )க்காக நான் முதல் முதலாக இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன். இந்த அனுபவத்தை இன்னொரு பதிவிலும் பகிர்ந்துள்ளேன்!! சிறுகதை ராஜா/ராணி களே, தூள் கிளப்புங்க!
3 முட்டாள்கள் - நண்பன்
இந்த தகவலை நான் இங்கு சொல்லக் காரணம் இருக்கிறது. 18-10-2010 அன்று தான் சவால் சிறுகதைப் போட்டி (2010 )க்காக நான் முதல் முதலாக இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன். இந்த அனுபவத்தை இன்னொரு பதிவிலும் பகிர்ந்துள்ளேன்!! சிறுகதை ராஜா/ராணி களே, தூள் கிளப்புங்க!
3 முட்டாள்கள் - நண்பன்
பல நாட்களாகப் பார்க்க ஆசைப்பட்டு, தற்சமயம் தான் 3 இடியட்ஸ் ஹிந்தித் திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. மிகவும் ரசித்துப் பார்த்தோம் - தெரிந்த ஹிந்தியில் புரிந்த வரை! ஆமிர் கான், (நம்) மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர் மற்றும் பலர் நடித்த படம். வீரு என்ற வைரஸ் ப்ரொஃபஸரிடம் ஆமிர்கான் பாத்திரம் (எந்தப் பெயரைச் சொல்வது? :-)) ) கேட்கும் கேள்வியிலிருந்து படத்துடன் ஒன்ற ஆரம்பித்து விட்டோம்!
வைரஸ் அந்த இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு முதல் நாள் பேச்சில், 'இந்தப் பேனா மிகவும் அபூர்வம், விண்வெளியில் அஸ்ட்ரோநாட்ஸ் எழுதுவதற்கு எந்தப் பேனாவினாலும் இயலவில்லை, பல கோடிகள் செலவழித்து இந்தப் பேனாவைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எந்த மாணவன் மிகவும் திறமைசாலியோ அவனுக்கு இதை நான் தருவேன், உங்களில் யார் இந்தப் பேனாவை வாங்கப் போகிறீர்கள்?' என்று கேட்டவுடன், எல்லாரும் தான் என்று கை தூக்குகிறார்கள் - கை தூக்கும் கான், 'ஏன் அவர்கள் பென்சிலில் எழுதவில்லை, இவ்வளவு கோடிகளை மிச்சம் பண்ணியிருக்கலாமே!' என்று வினா எழுப்பினார். ரசித்த காட்சி!
படத்தைப் பற்றி வேறொன்றும் சொல்லப் போவதில்லை - இந்தப் படம் நண்பன் என்ற பெயரில் இயக்குனர் சங்கர் எடுக்கப் போவதாகவும், அதில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா நடிக்கப் போவதாகவும் செய்தி வந்திருந்ததாக ஞாபகம். அப்போது படத்தின் சஸ்பென்ஸ் உடையக் கூடாது இல்லையா, அதனால் தான் கதையைச் சொல்லவில்லை! ஆனாலும் ஆமிர் கான் ரோலில் விஜய்..... ஹிந்திப் படத்தில் வில்லன் சதுர் ராமலிங்கம் என்ற பாண்டிச்சேரியில் படித்த ஹிந்தி தெரியாத காரக்டர் - நம்மைக் கிண்டலடிக்கிறார்களோ என்ற என் ஆதங்கம், தமிழ்ப் படத்தில் ஹிந்திக்காரர் வில்லனா என்று பார்க்கும் போது தீரலாம்!
படத்தைப் பற்றி வேறொன்றும் சொல்லப் போவதில்லை - இந்தப் படம் நண்பன் என்ற பெயரில் இயக்குனர் சங்கர் எடுக்கப் போவதாகவும், அதில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா நடிக்கப் போவதாகவும் செய்தி வந்திருந்ததாக ஞாபகம். அப்போது படத்தின் சஸ்பென்ஸ் உடையக் கூடாது இல்லையா, அதனால் தான் கதையைச் சொல்லவில்லை! ஆனாலும் ஆமிர் கான் ரோலில் விஜய்..... ஹிந்திப் படத்தில் வில்லன் சதுர் ராமலிங்கம் என்ற பாண்டிச்சேரியில் படித்த ஹிந்தி தெரியாத காரக்டர் - நம்மைக் கிண்டலடிக்கிறார்களோ என்ற என் ஆதங்கம், தமிழ்ப் படத்தில் ஹிந்திக்காரர் வில்லனா என்று பார்க்கும் போது தீரலாம்!
பாப்பையும் ஆலிவ்வும் மற்றும் நானும்..
இந்த ஞாயிறு இந்தியன் எக்ஸ்பிரஸில் Popeye and Olive கார்ட்டூனில், ஆலிவ் பாப்பையைக் கோவித்துக் கொள்கிறாள், 'நான் இன்று என் பிறந்த நாளுக்காக ஒன்றும் வாங்காதே என்று சொன்னேன் அல்லவா,' என்று; அவன் கேட்கிறான், 'ஆமாம், அதற்கென்ன' வென்று. அவளும், 'திரும்பத் திரும்ப சொன்னேனல்லவா, ஒன்றும் வாங்காதே என்று' என்று கேட்கிறாள். அவனும், 'ஆமாம், அதுதான் நான் ஒன்றும் வாங்கவில்லையே!' என்கிறான். ஆலிவ் கோபமாகக் கேட்கிறாள், 'அதான் நானும் கேட்கிறேன், ஏன் ஒன்றும் வாங்கவில்லை??' !!
படித்துச் சிரித்த எனக்கு பயமாகவும் உள்ளது. என் மாமியார், அம்மா இருவருமே இந்தத் தீபாவளிக்கு தங்களுக்கு புதுப் புடவை ஏற்கெனவே இருப்பதால் வாங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் (தனித் தனியாகத் தான்); நானும் வாங்கவில்லை .......


