Showing posts with label கதம்பம். Show all posts
Showing posts with label கதம்பம். Show all posts

Tuesday, October 18, 2011

கதம்பம் -9

சவால் - சிறுகதைப் போட்டி 2011 
இம்முறையும் சிறுகதைப் போட்டியை பரிசல்காரன்   சிலரோடு சேர்ந்து அறிவித்துள்ளார். விவரங்களை இந்த இரண்டு   சுட்டிகளிலும் பார்க்கவும். போட்டிக்கான விதிமுறைகளைப் பின்பற்றி, கடைசி நாளான 31-10-2011 க்குள் அனுப்புங்கள்! முன்பே இந்த அறிவிப்பைப் பார்க்காதவர்களுக்குத் தான் இந்த தகவல்!

இந்த தகவலை நான் இங்கு சொல்லக் காரணம் இருக்கிறது. 18-10-2010 அன்று தான் சவால் சிறுகதைப் போட்டி (2010 )க்காக நான் முதல் முதலாக இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன். இந்த அனுபவத்தை இன்னொரு பதிவிலும் பகிர்ந்துள்ளேன்!! சிறுகதை ராஜா/ராணி களே, தூள் கிளப்புங்க!

3 முட்டாள்கள் - நண்பன்


பல நாட்களாகப் பார்க்க ஆசைப்பட்டு, தற்சமயம் தான் 3 இடியட்ஸ் ஹிந்தித் திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. மிகவும் ரசித்துப் பார்த்தோம் - தெரிந்த ஹிந்தியில் புரிந்த வரை! ஆமிர் கான், (நம்) மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர் மற்றும் பலர் நடித்த படம். வீரு என்ற வைரஸ் ப்ரொஃபஸரிடம் ஆமிர்கான் பாத்திரம் (எந்தப் பெயரைச் சொல்வது? :-)) ) கேட்கும் கேள்வியிலிருந்து படத்துடன் ஒன்ற ஆரம்பித்து விட்டோம்! 

வைரஸ் அந்த இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு முதல் நாள் பேச்சில், 'இந்தப் பேனா மிகவும் அபூர்வம், விண்வெளியில் அஸ்ட்ரோநாட்ஸ் எழுதுவதற்கு எந்தப் பேனாவினாலும் இயலவில்லை, பல கோடிகள் செலவழித்து இந்தப் பேனாவைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எந்த மாணவன் மிகவும் திறமைசாலியோ அவனுக்கு இதை நான் தருவேன், உங்களில் யார் இந்தப் பேனாவை வாங்கப் போகிறீர்கள்?' என்று கேட்டவுடன், எல்லாரும் தான் என்று கை தூக்குகிறார்கள் -  கை தூக்கும் கான், 'ஏன் அவர்கள் பென்சிலில் எழுதவில்லை, இவ்வளவு கோடிகளை மிச்சம் பண்ணியிருக்கலாமே!' என்று வினா எழுப்பினார். ரசித்த காட்சி!

படத்தைப் பற்றி வேறொன்றும் சொல்லப் போவதில்லை - இந்தப் படம் நண்பன் என்ற பெயரில் இயக்குனர் சங்கர் எடுக்கப் போவதாகவும், அதில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா நடிக்கப் போவதாகவும் செய்தி வந்திருந்ததாக ஞாபகம். அப்போது படத்தின் சஸ்பென்ஸ் உடையக் கூடாது இல்லையா, அதனால் தான் கதையைச் சொல்லவில்லை! ஆனாலும் ஆமிர் கான் ரோலில் விஜய்.....  ஹிந்திப் படத்தில் வில்லன் சதுர் ராமலிங்கம் என்ற பாண்டிச்சேரியில் படித்த ஹிந்தி தெரியாத காரக்டர் - நம்மைக் கிண்டலடிக்கிறார்களோ என்ற என் ஆதங்கம், தமிழ்ப் படத்தில் ஹிந்திக்காரர் வில்லனா என்று பார்க்கும் போது தீரலாம்!

பாப்பையும் ஆலிவ்வும் மற்றும் நானும்.. 


இந்த ஞாயிறு இந்தியன் எக்ஸ்பிரஸில் Popeye and Olive கார்ட்டூனில், ஆலிவ் பாப்பையைக் கோவித்துக் கொள்கிறாள், 'நான் இன்று என் பிறந்த நாளுக்காக ஒன்றும் வாங்காதே என்று சொன்னேன் அல்லவா,' என்று; அவன் கேட்கிறான், 'ஆமாம், அதற்கென்ன' வென்று. அவளும், 'திரும்பத் திரும்ப சொன்னேனல்லவா, ஒன்றும் வாங்காதே என்று' என்று கேட்கிறாள். அவனும், 'ஆமாம், அதுதான் நான் ஒன்றும் வாங்கவில்லையே!' என்கிறான். ஆலிவ் கோபமாகக் கேட்கிறாள், 'அதான் நானும் கேட்கிறேன், ஏன் ஒன்றும் வாங்கவில்லை??' !!

படித்துச் சிரித்த எனக்கு பயமாகவும் உள்ளது. என் மாமியார், அம்மா இருவருமே இந்தத் தீபாவளிக்கு தங்களுக்கு புதுப் புடவை ஏற்கெனவே இருப்பதால் வாங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் (தனித் தனியாகத் தான்); நானும் வாங்கவில்லை  .......

Sunday, August 14, 2011

கதம்பம்--7

தாய்க்கு ஒரு தாலாட்டு
         
முதலில் என் லீவ் லெட்டரும் மன்னிப்புகளும். என் அம்மாவுக்கு நான் ஒரு அம்மா போல சில காலம் பணி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால், வலைப்பூவிற்கு அடிக்கடி வர முடியவில்லை. என் நண்பர்களின் பதிவுகளைப் படிக்கிறேனே ஒழிய, பின்னுரை எழுத நேரம் கிடைப்பதில்லை. கூடிய விரைவில் டைம் மானேஜ்மெண்ட் செய்யப் பழகிக் கொள்கிறேன்.
              
என் அம்மா சமீபத்தில் தான் தீர்த்த யாத்திரை சென்று வந்தார். அவர் ஒரு விந்தை மனிதர். என் அப்பா இருந்தவரை அவரே அம்மாவின் உலகம் - அப்பா சொல்லே அம்மாவுக்கு வேதவாக்கு. எப்போதும் இப்போதும் அம்மாவுக்கு ஏதேனும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அவர் 10 நாட்கள் முன் வீட்டில் கீழே விழுந்ததில் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு. இப்போதும் அவரால் முடிந்த வேலைகளை அவரே செய்து கொள்கிறார். அணில் செய்யும் உதவி போல நான் அவருக்கு உதவுகிறேன். அவருக்கு தலை வாரி பின்னி விடுவது தான் எனக்கு விநோதமாக இருக்கிறது!! 
என் அம்மா விரைவில் நலம் பெற பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பெயரில் என்ன இருக்கிறது?

ஆட்சி மாறும் போது முந்தைய ஆட்சியாளர்களின் திட்டங்களை உடைப்பில் போடுவது வாடிக்கையாகி வருகிறது.  பழைய மழை நீர்ச் சேமிப்பு திட்டம் கட்டாயமாக அமல்படுத்தப் படவில்லை.  சமீபத்தில் சமச்சீர் கல்விக்காக உச்சத்தில் வாங்கிய குட்டும் மறக்க முடியாது.  கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்றொரு திட்டம் - இத்திட்டத்தை, கூட சிலபல  வசதிகளைச் சேர்த்து, புது காப்பீட்டுத் திட்டமாக கொணரப் போகிறோம் என்று தற்போது சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் காப்பீட்டுத் திட்டம், இந்தியா முழுதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.  இது மத்திய அரசாங்கத்தின் திட்டம் - மாநில அரசின் மூலம் அமல்படுத்தப் படுகிறது.  வேறெந்த மாநிலத்திலும் முதலமைச்சர் பெயரில் ஆரம்பிக்கப் படவில்லை!!  தமிழ்நாட்டில் தான் இப்படி! 

6, 7 மாதங்களுக்கு முந்தைய நிகழ்வு - பேருந்தில் வரும் வழியில், திருப்பத்தில் ஒரு கடை - அந்தக் கடையில்  'கலைஞர் டிவிக்கு ரிமோட் கிடைக்கும்' என்று எழுதியிருந்தனர். முதலில் கலைஞர் சானலுக்கு தனி ரிமோட்டோ என்று குழம்பினேன், பின்னர் தான் இது கலைஞர் அரசு தரும் இலவச டிவிக்கான ரிமோட் எனப் புரிந்தது!

புதிய அரசுக்கு ஒரு வேண்டுகோள் - உங்கள் புதிய திட்டங்களுக்கு பொதுவான பெயர்களை வையுங்கள். உங்கள் பெயரைத் தான் திட்டங்களுக்கு வைத்து ஞாபகப் படுத்த வேண்டும் என்பதல்ல - நல்ல திட்டங்களால் உங்கள் பெயர் நிச்சயம் நிலைக்கும்!!  பொதுப் பெயர்கள் அன்றி வேறு பெயர்கள் தான் வைக்க வேண்டுமென்றால் மக்களுக்கு நன்மைகள் செய்த, நேர்மையாக வாழ்ந்த தலைவர்களின் பெயரை, ஜாதி, இன, கட்சி வேறுபாடின்றி வைக்கலாமே?!

பேருந்தில் பேசாதே!

பேருந்தில் அனாவசிய விஷயங்கள் எதுவும் பேசக் கூடாது என்பது என் கொள்கை.  சிலரை நெடுநாள் கழித்து பேருந்தில் பார்க்க நேரிடும் போதும், முடிந்தவரை சொந்தத் தகவல்களை பேருந்தில் கத்திப் பேசுவதை தவிர்த்து விடுவேன்.
அன்றொரு நாள், கிட்டத்தட்ட ஏழெட்டு  வருடங்களுக்குப் பிறகு, பழைய தோழியைப் பேருந்தில் பார்த்தேன்.  அவர் எனக்குப் பின்னால் சீட்டில் அமர்ந்திருந்தார்.  பொது கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன்.  பஸ்ஸில் கூட்டமும் அதிகமாக ஆரம்பித்தது.  அப்போது அவர் என்னிடம், "உன் மகன் பெரியவனாகி விட்டானா?" என்று கேட்டார்.  அவன் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்ததை மனதில் வைத்து "ஆமாமா" என்று மட்டும் பதில் சொன்னேன்.  "அப்புறம் கல்யாணத்தைப் பண்ணி வைத்து விட வேண்டியது தானே?" என்று அவர் சத்தமாகக் கேட்கவும் நொந்து போனேன்!!. 

Sunday, January 23, 2011

கதம்பம் - 2

போலியோ சொட்டுமருந்து
ஐந்து வயதிற்குட்பட்ட உங்கள் குழ்ந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து அளித்து விட்டீர்களா? சமீபத்தில் ஏற்கெனவே கொடுத்திருந்தாலும் பரவாயில்லை, மீண்டும் கொடுங்கள்;  இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு வராது என டாக்டர் குழு ஒன்று பொதிகை டி.வி.யில் விளக்கமளித்தனர்.  சொட்டுமருந்து நிறம் மாறியிருந்தால் மட்டும் அதை உபயோகிக்காமல் பார்த்துக் கொள்ளூங்கள். 
நான் பள்ளிப் பருவத்தில் பார்த்த போலியோவால் பாதிக்கப்பட்ட பெண், இன்னும் என் கண்ணுக்குள் இருக்கிறாள்.  இந்த அரக்கனை ஒழிக்க அக்கம்பக்கத்தில் இவ்வயதுக் குழந்தைகள் இருந்தாலும் போலியோ சொட்டுமருந்து போடும் நாள் இன்று என ஞாபகப்படுத்துங்கள்

மின்வெட்டு நேரம்...
மின்வெட்டு நேரம் - அப்போது தான் குடும்பம் முழுவதும் ஒரு இடத்தில் கூடிக் களிக்கின்றோம் இல்லையா? இந்த இன்பமான பொழுதுகளால் வருங்காலத்தில் முழுநேரமும் மின்சாரம் வந்தால் கூட வேண்டாம் என்று சொல்லவும் வாய்ப்பிருக்கிறது!
நேற்று  இத்தருணத்தில் பழுதான மின்சாதனங்களைச் சரி செய்கின்ற போது, வெளிச்சம் போதவில்லை; சைக்கிளைக் கொண்டுவந்து அதை ஸ்டாண்டில் வைத்து இயக்கி அதன் விளக்கு வெளிச்சத்தில் வேலையை முடிக்க உதவினர் என் மகன்கள்!  ஐடியாவிற்கு காப்பிரைட் இல்லை, நீங்களும் உபயோகிக்கலாம்!!

Laughter is the best medicine! 
நடந்த சம்பவம் இது.  ஒருவர் மூக்கில் அறுவை சிகிச்சை முடிந்து ஹாஸ்பிடலில் பெட் ரெஸ்டில் இருந்தார்.  மூக்கில் முழுக்க பஞ்சு வைத்து அடைத்திருந்தது.  அவரைப் பார்க்க அலுவலகத்திலிருந்து ஒருத்தி வந்தார்.  நோயாளி படுத்திருந்ததால், அவர் மனைவியிடம் நலம் விசாரித்தார்.  மூக்கில் ஏன் அடைத்து வைத்திருக்கிறது என அவர் கேட்க, அந்த மனைவியும் காயம் ஆறவும் அதுவரை மூக்கால் மூச்சு விடக் கூடாது, வாயால் தான் விடவேண்டும் எனவும் கூறினார்.  வந்தவர், "அப்படின்னா, அவர் எப்படி சாப்பிடுவார்?" எனக் கேட்டு மனைவியை மயங்கி விழச் செய்தார்!!